ஜனாதிபதி மைத்திரி, மஹிந்தவை சூழ்ச்சியினால் வீழ்த்தியுள்ளார் : ஜே.வி.பி!!

483

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சூழ்ச்சியினால் வீழ்த்தியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ச சூழ்ச்சிகாரர்களின் சதி வலையில் சிக்கிவிட்டார்.
மஹிந்த ராஜபகசவின் அரசியல் வரலாற்றில் மிகவும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு, நாடாளுமன்றிலிருந்து வெளியேறி சென்றார்.

1970ஆம் ஆண்டு இளைய நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் அங்கம் வகித்த மஹிந்த ராஜபக்ச, இன்று பலரின் கேலி கிண்டல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றை விட்டு வெளியேறினார்.

நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் எவருக்கேனும் சந்தேகம் இருந்தால் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கூடிய ஆவணமொன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெட்கமேனும் இருந்தால் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அமைய பதவி விலக வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ரணில் – மைத்திரியின் தனிப்பட்ட பிரச்சினைக்கு மக்கள் பதில் சொல்ல வேண்டியதில்லை. கட்சி மட்டுமன்றி மக்களும் பயங்கரவாதத்திற்கு மக்கள் ஆளாகக்கூடாது.

ராஜபக்ச – மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை பலம் இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு இடமளிக்கப்பட்டிருக்கும்.

ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்க நாம் பின்நிற்கப் போவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.