7 வருடங்களுக்கு பிறகு சிம்புவை சந்திக்கும் நயன்தாரா : 5ம் திகதி சென்னையில் படப்பிடிப்பு!!

260

Simbuசிம்புவும் நயன்தாராவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்க உள்ளனர். இருவரையும் ஜோடியாக வைத்து பாண்டிராஜ் இயக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 5, 6ம திகதிகளில் சென்னையில் நடக்கிறது. இதில் நடிப்பதற்காக நயன்தாரா வருகிறார்.

சிம்பு – நயன்தாரா சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அப்போது படமாக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. சிம்பு, சூரி நடித்த காட்சிளை பாண்டிராஜ் படமாக்கியுள்ளார்.

படப்பிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் சிம்பு வந்து விடுவதாகவும் முழு ஈடுபாட்டுடன் நடிப்பதாகவும் படப்பிடிப்பு குழுவினர் பாராட்டுகிறார்கள். அடுத்த கட்டமாக சிம்பு – நயன்தாரா நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர்.

சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் 2006ல் வல்லவன் படப்பிடிப்பில் நட்பு ஏற்பட்டு காதல் மலர்ந்தது. சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ள வில்லை.

நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத நிகழ்ச்சியொன்றில் இருவரும் பங்கேற்று அருகருகே அமர்ந்து இருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் இல்லை. பல வருட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் சந்திக்கவும் பேசவும் உள்ளனர்.