பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றப்படும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரதமர் செயலகத்தின் நேற்று மாலை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை செல்லுபடியற்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரவித்துள்ளார்.
இந்த பிரேணை நிறைவேற்றும் போது செங்கோல் உரிய இடத்தில் காணப்படவில்லை எனவே அது செல்லுப்படியற்றதென அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பெரும்பான்மையுடன் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ச பிரதமர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற அனுமதிக்க முடியாதென ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பரபரப்பான நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.