மஹிந்த உள்ளிட்ட நாம் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் சிக்கினோம் : குமார வெல்கம!!

958

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாம் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் சிக்கி தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

நாம் வேண்டவே வேண்டாம் என கூறிய போது சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செய்த செயலினால் இறுதியில் சில ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவாக்கிய தாமரை மொட்டு சின்னமும் அழிந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிந்தது. அரசாங்கமும் இல்லை, நாமும் முடிந்தோம். நாம் அனைவரும் எதிரியின் சதி வலையில் சிக்கி விட்டோம் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சில தலைவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென கடும் தொனியில் அனைவரின் மத்தியிலும் அவர்களை வெல்கம திட்டித்தீர்த்துள்ளார்.