மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல பேஷன் டிசைனர் : அதிர்ச்சிக் காரணம்!!

333

இந்திய தலைநகர் டெல்லியில் பிரபல பேஷன் டிசைனர் மாலா லகானியும் அவரது உதவியாளரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை தைத்துக் கொடுத்த பணத்தை மாலா கொடுக்காததால் அவரிடம் பணியாற்றிய தையல்காரர் இந்த கொலையை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் மாலா லகானி (53). பிரபல ஆடை வடிவமைப்பாளரான அவர், புதுமையான பல ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இவரிடம் ராகுல் என்பவர் தையல்காரராக பணியாற்றி வந்தார்.

அவர் கொடுக்கும் டிசைனுக்கு ஏற்ப ஆடைகளை தைத்துக் கொடுத்து வந்த ராகுலுக்கு உரிய கூலியை கொடுக்காமல் மாலா லகானி நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சரியாக பணியாற்றவில்லை என காரணம் கூறி பணத்தை தராமல் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் சம்பவத்தன்று தனது நண்பர்கள் ரஹ்மத் மற்றும் பஷிருடன் மாலா வீட்டுக்கு சென்றுள்ளார்.

தனக்கு தர வேண்டிய பணத்தை தருமாறு கூறி தகராறு செய்துள்ளார். அப்போது பேச்சவார்த்தை முற்றி ராகுலும் அவரது நண்பர்களும் சேர்ந்து மாலாவை தாக்க முயன்றனர். அப்போது மாலாவின் உதவியாளர் பகதூர் உள்ளே புகுந்து தடுத்துள்ளார். இதில் ராகுலும் அவரது நண்பர்களும், பகதூரை கத்தியால் குத்தியதுடன், மாலாவையும் தாக்கினர்.

கத்தி குத்தில் பலத்த காயமடைந்த மாலாவும், பகதூரும் உயிரிழந்தனர். இதையடுத்து ராகுல் அங்கிருந்து தப்பியுள்ளார். தகவல் அறிந்து வந்த பொலிசார் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் மற்றும் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.