நாடாளுமன்றத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர்? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

283

நாடாளுமன்றத்திற்குள் கத்தி கொண்டு சென்ற உறுப்பினர் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தேவரப்பெரும கூடிய கத்தியுடன் தாக்க முயற்சி செய்துள்ளார்.
ஆக்கிரோஷமான முறையில் மஹிந்த தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பாலித்த பாய்ந்துள்ளார். எனினும் அங்கிருந்த சக உறுப்பினர்களை அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்ற கூடிய வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது சாபநாயகர் மீது தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியை சிலர் கத்தியுடன் நாடாளுமன்றத்திகுள் அட்டகாசம் செய்தனர்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதமர் யார் என்பது தொடர்பில் மஹிந்த – ரணில் தரப்பினருக்கு இடையில் பாரிய மோதல் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.