நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு? பரபரப்பாகும் இலங்கை அரசியல்!!

323

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உறுப்பினர்களின் பெயர்களை அழைத்து வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சபை கூடுகின்ற போது மேற்படி வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழு இன்று காலை 9 மணிக்கு அவசரமாக கூடுகின்றது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுக்கூட்டமும் இன்று காலை 10 மணிக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளன.

மேலும், இன்று முற்பகல் 11 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டமும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசியல் பரபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது