நாடாளுமன்றில் பயங்கர தாக்குதல் : மன்னிப்பு கோரிய நாமல்!!

243

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வருத்தம் அடைவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக் ஊடாக இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கமைய மஹிந்தவுடன் கலந்துரையாட சென்ற போது, தன் மீது தாக்குதல் நடத்தியதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கலந்துரையாடல் மேற்கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தன்னை தள்ளிட்டு தாக்க முயற்சித்தார் என ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் நாமல் ராஜபக்ச தன்னிடம் மன்னிப்பு கேட்டமையினால் அந்த பிரச்சினை அவ்விடத்திலேயே நிறைவுக்கு வந்ததாக சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.