இலங்கை நாடாளுமன்றுக்குள் தற்போது பொலிஸ் படை அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளது. பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றுக்குள் செங்கோளுடன் சபாநாயகர் வருகைத்தந்துள்ளார்.
எனினும் மஹிந்த அணியினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். சபாநாயகரின் ஆசனத்தையும் வீசியுள்ளனர்.
இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டு சபாநாயகர் வெளியில் சென்று விட்டார். சபாநாயகரை பொலிஸ் படையினர் பாதுகாப்பாக வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும், மஹிந்த அணியினருக்கும் இடையில் ஒரு யுத்தமே நடைபெற்றதைப் போன்று இன்றைய நடாளுமன்றம் காணப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம் : பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.
எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.