நாடாளுமன்றத்திற்குள் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸார் மீதும் தாக்குதல்!!

269

நாடாளுமன்றத்திற்குள் செங்கோலை கொண்டு வருவதற்கு மஹிந்த தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் செங்கோல் கொண்டு வரப்பட்டது.

எனினும், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் களமிறக்கப்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் மீது தண்ணீர் மற்றும் பல்வேறு பொருட்களை மஹிந்த தரப்பினர் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.30 வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும் ஏற்படுத்தப்பட்ட குழப்பத்தினால் இன்றும் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.