சகோதரனை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை!!

577

courtதனது சகோதரரை கொலை செய்தமை மற்றும் சகோதரியை தாக்கிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு மாத்தறை உயர் நீதிமன்று மரண தண்டனை மற்றும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மாத்தறை உயர் நீதிமன்ற நீதிபதி பியங்கத சில்வாவினால் இவ்வாறு தண்டனைக்கு உள்ளானவர் ஹக்மன கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான நபராவார். 2003ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி காணிப் பிரச்சிணையின் காரணமாக இந்த கொலைச் சம்பம் இடம்பெற்றுள்ளது.