பெண்கள் நம்பிக்கை நிறுவனத்தின் கிளை அலுவலகம் நேற்று (15.11.2018) காலை 10 மணியளவில் வவுனியா தரணிக்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா மற்றும் கௌரவ விருந்தினராக சோ ஆ நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கிறிஸ் லுக்கின், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,
வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, சோ ஆ நிறுவனத்தின் மேற்பார்வை சபையின் தலைவர் ஹரி போல், சோ ஆ நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சு.அன்ரனி ஹலீசியஸ், சுகாதார வைத்திய அமைச்சின் வைத்தியர் எஸ்.லவன், பொஸ்டோ நிறுவனத்தின் தலைவர் T.நாகேந்திரராசா ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பல்வேறு ரீதியில் நலிவுற்ற நிலையிலுள்ள கிராமியப் பெண்களை குழுக்களாக ஒன்றிணைத்து ஒருவருக்கெருவர் உதவும் வகையில், வலுப்படுத்தி அவர்களின் குடும்பங்களில் சமூக பொருளாதார நிலைகளில் நிலைத்திருக்க்கூடிய, சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்ததுவதன் மூலம் அவர்களை சுயசார்புடையவர்களாக மாற்ற உதவுதல் எனும் தொலைநோக்குடன் இந்த நிறுவனம் சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளால் உருவாகியுள்ளது.