வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்த உப நகரபிதா!!

545

வவுனியா நகர்ப்பகுதியில் புதிய குழாய்க்கிணறு ஒன்று உப நகரபிதா சு.குமாரசாமியால் அமைக்கப்பட்டு மக்களிடம் இன்று கையளிக்கப்பட்டது.

வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குழாய்க்கிணறு ஒன்றினை அமைத்துத் தருமாறு அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் கிராம மக்கள் உப நகரபிதாவிடம் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானால் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உப நகரபிதாவினால் நகர கிராம அலுவலர் அலுவலகத்தில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.