17 பாலியல் தொழில் விடுதிகள் முற்றுகை : 59 பேர் கைது!!

318

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் கம்பஹா மாவட்டத்தில் இயங்கிய 17 பாலியல் தொழில் விடுதிகளை முற்றுக்கையிட்ட பொலிஸார் அவற்றில் இருந்த59 பேரை கைது செய்துள்ளனர்.

நேற்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விடுதிகளின் முகாமையாளர்களாக கடமையாற்றியவர்கள் உட்பட 19 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.