கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் : இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!!

297

இலங்கையில் ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாவிட்டால், நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் என்று அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

கொழும்பில் உள்ள அமரிக்க தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையுடனான பாதுகாப்பு விடயங்களில் தாக்கங்கள் ஏற்படும் என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா, இலங்கையின் இராணுவக்கட்டமைப்புக்காக 39 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்தது.

அத்துடன் கடற்படை கப்பல் ஒன்றையும் அமரிக்கா கடந்த ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வழங்கியது

இந்த நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையை அமெரிக்கா உன்னிப்பாக நோக்கி வருகிறது என்று அமரிக்க தூதரகத்தின் பேச்சாளர் டேவிட் ஜே மெக்கியூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்தமை நியாயமற்ற செயல் என்று அமெரிக்க தூதரகம் கண்டித்திருந்தது.

இந்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்டாவிட்டால், கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் ஜே மெக்கியூரி குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-