வவுனியாவில் இரவு நேரத்தில் தனியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

1142

வவுனியா – காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் வழியாக காத்தார்சின்னகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த மூவரும், துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண்ணொருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார்சைக்கிளில் சென்ற மூவரும் மதுபோதையில் காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

அத்துடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.