இன்று கூட்டப்பட்ட நாடாளுமன்றம் : பிரதி சபாநாயகர் வெளியிட்ட திடீர் தீர்மானம்!!

325

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் மீண்டும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் 1 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 10 அல்லது 15 நிமிடங்களே இன்றைய அமர்வு நடைபெற்றுள்ளது.

இந்த அமர்வில் அனுரகுமார திசாநாயக்க, தினேஸ் குணவர்தன, லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் உரையாற்றியிருந்தனர். இதையடுத்து கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர், “இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நான் இங்கு கூறுகின்றேன். இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி 10 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நாடாளுமன்றில் செங்கோளுடன், பிரதி சபாநாயகர் வெளியே சென்ற நிலையில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலேயே தொடர்ந்தும் இருக்கின்றனர்.