இன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் ஏன் கலந்து கொள்ளவில்லை?

390

சபாநாயகர்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை கிடையாது என்பதனை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒப்புக்கொள்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கூடுதல் பெரும்பான்மை உண்டு என்பதனை கரு ஜயசூரிய ஒப்புக்கொள்கின்றார். நாடாளுமன்றை எதிர்கொள்ள முடியாத காரணத்தினால் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று அமர்வில் பங்கேற்கவில்லை.

பிரதமர் ஒருவரை நியமிக்கவோ அல்லது பதவி நீக்கவோ சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது. கட்சித் தலைவர் கூட்டத்தில் இதனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வலியுறுத்தியது என தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.