மேல் மாகாணசபையில் அதன் உறுப்பினர்கள் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேல் மாகாணசபையில் நேற்று வரவுசெலவுத் திட்ட உரையை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய ஆற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பத்தரமுல்லவில் அமைக்கப்பட்ட புதிய சபா மண்டபத்தில், மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வ கணினி உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கணினிகளிலேயே, வயதான மாகாணசபை உறுப்பினர்கள் கூட, ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாகாண சபை உறுப்பினர்கள் மோசமான செயற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.





