வவுனியாவில் வன்னியின் வாதச்சமர் இறுதிப்போட்டி – 2018!!

1256

தமிழ் மாமன்றம் நடாத்தும் வன்னியின் வாதச்சமர் 2018 இறுதிப்போட்டிகள் வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் இன்று (20.11.2018) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தமிழ் மாமன்றத்தின் தலைவர் கு.அனுஜன் தலமையில் நடைபெற்று வருகின்றன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ரீதியில் போட்டிகள் இடம்பெற்று அவற்றிலிருந்து மாவட்ட ரீதியில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி ஆகியன இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டன.

மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக்களுக்கிடையே தற்போது இறுதிச்சுற்றுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இப் போட்டியின் நடுவர்களாக தாலிக்குளம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் கா.பிரதீஸ், சட்டத்தரணி லோ.அருணியா, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் செ.மதுரகன், சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தெ.துர்க்காயினி , உள சமூக சேவையாளர் ஆ.ஜெசிதா, ஆசிரியர் ஜ.கதிர்காமசேகரன், மென்பொருட் பொறியியலாளர் ச.கஜன் ஆகியோர் அங்கத்துவம் வகித்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பினை தமிழ் மாமன்றத்தின் பொருளாளர் கு.சிரஞ்சீதன் வழங்கி வருவதுடன் பார்வையாளர்களாக பெற்றோர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.