ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் சில பாரிய குற்றச் செயல்கள் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் விசாரணைகளை நடத்தி வந்த பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய பொலிஸ் ஆணைக்குழு இதனை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு இடமாற்றம் வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் குறித்த இடமாற்றத்தை ஜனாதிபதி ரத்து செய்துள்ளார்.
நிஷாந்த சில்வா கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம், லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்ட விவகாரம், வஷீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் விவகாரம் உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.





