விபத்து
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் காரொன்ருடன் மோதியதில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் இன்று நண்பகல் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர் மடம் அரசடி வீதிவரை இழுத்துச்சென்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.