எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் பொது தேர்தல் பாரிய பாதிப்பு ஏற்படும் என கட்சியின் முக்கியஸ்தர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்க மாட்டார் என்ற நிலைப்பாட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி வந்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் உயர் தலைவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக பொதுத் தேர்தல் தனியாக பிரதமர் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதற்கு கட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படியிருப்பினும் அந்த யோசனைக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கப்பாடுகளை வெளியிடாமையினால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கமைய தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் பலனில்லை என சிறுபான்மை கட்சியினர் பல முறை தெரிவித்துள்ளனர்.
-தமிழ்வின்-





