வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பரவலாக துண்டுப்பிரசுரங்கள்!!

659

துண்டுப்பிரசுரங்கள்

வவுனியா நகரசபை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப்பிரசுரங்கள் இன்று (21.11.2018) பூங்கா வீதியில் பரவலாக வீசப்பட்டு கிடைந்தன.

வவுனியா பள்ளிவாசலுக்கு முன்பாக (Whole Sale Market அருகாமையில்) அமைக்கப்பட்டுள்ள பாதணி விற்பனை நிலையம் திறப்பதற்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத முறையில் அனுமதி பெற்று முன்புறமாக வேலை நடைபெற்று வருகின்றது.

இது முற்றிலும் அரசாங்கத்திற்கு எதிரான செயல். இதற்கு அனுமதி வழங்கியதும் ஒத்துளைப்பும் பங்களிப்பும் மறைமுகமாக நகரசபை அதிகாரிகளிடமிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இதனை நாங்கள் மிகவும் தாழ்மையான முறையில் உங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றோம் .

நீங்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாங்கள் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளினதும் முழு விபரங்களையும் தகுந்த ஆதாரங்களுடன் பகிரங்கமாக மக்களுக்கு கொண்டு சென்று அனைவரையும் பணிநீக்குவோம், மற்றும் இப்படியான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்கு தகுந்த தண்டணை அளிக்கப்படும் என்பதனையும் தெரிவிக்கின்றோம் என்பதுடன் மேலும் பல விடயங்கள் துண்டுப்பிரசுரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. துண்டுப்பிரசுரத்தில் கீழ் பகுதியில் இவ்வண்ணம் பொது மக்கள் நலன் அமைப்பு உரிமை என கோரப்பட்டுள்ளது.