ரணிலின் பெயரை ஆவேசமாக கூறிய விமல் : நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்பு!!

675

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் மஹிந்த அணியினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. முதலாவதாக தினேஸ் குணவர்தன உரையாற்றியிருந்தார். தொடர்ந்து விமல் வீரவங்ச, டக்ளஸ், அநுர உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.

இதன்போது விமல் வீரவங்ச மிகவும் ஆக்ரோசமாக உரையாற்றினார். இதன்போது ரணில் விக்ரமசிங்கவின் பெயரை கூறி உரையாற்றியிருந்தார்.

இவருடைய பேச்சுக்கு நாடாளுமன்றில் பெரும் சத்தம் போட்டதுடன், அவரை பேச விடாமல் கூச்சலிட்டுள்ளனர்.

தொடர்ந்து சபாநாயகர் கரு ஜெசூரிய செய்வது சட்டவிரோதமான செயல் எனக் கூறி விமலும் நாடாளுமன்றத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துவிட்டார்.