இரு சிறுமிகளுக்கு இரவில் எமனாக வந்த யானை!!

1240

மஹியங்கனை, மாபகடவெவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

மஹியங்கனை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

அந்த வகையில் நேற்று இரவு இரண்டு சிறுமிகள் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.