இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிக மோசமான பெறுமதியை இலங்கை ரூபாய் எட்டியுள்ளது. மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு அமைய டொலர் ஒன்றின் விலை 180 ரூபாவை கடந்துள்ளது.
அறிக்கைக்கமைய இன்று 180.66 ரூபாயை எட்டியுள்ளது. அதற்கமைய டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.72 ரூபாயை எட்டியுள்ளது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை சந்திக்கும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





