பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர் : தற்கொலை செய்த காதலி : வழக்கில் அதிரடி திருப்பம்!!

415

வழக்கில் அதிரடி திருப்பம்

நெல்லை மாவட்டத்தில் பட்டப்பகலில் இசக்கி என்ற இளைஞர் கொடூரமாக விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 20 தேதி அன்று கூட்டுறவு சங்க உதவி அலுவலர் இசக்கி சங்கர் (31) என்பவர் தாமிரபரணி நதிக்கரையில் குளிக்க சென்ற போது மர்ம நாபார்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இசக்கி வேறு சமூகத்தை சேர்ந்த சத்யபாமா என்ற 21 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது.

இதனால் ஆணவக்கொலையாக இருக்குமோ என சந்தேகமடைந்த பொலிஸார், சத்யபாமாவின் குடும்பத்தை சேர்ந்த நபர்களை விசாரணை செய்ததால் உண்மை வெளிவரும் என நினைத்து விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதற்குள் சத்யபாமா மறுநாளே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அடுத்தடுத்து இருவரும் இறந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், சத்யபாமாவின் சகோதரன் ஐயப்பன், தன் சகோதரி வேறு சாதியை சேர்ந்த இசக்கி சங்கரை காதலித்ததால், தன் சக நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து இசக்கி சங்கரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர்களை கைது செய்துள்ள பொலிஸார், ஏற்கனவே சாதி வெறியில் இருந்துள்ள ஐயப்பனுக்கு, அவனுடைய சக பள்ளி மாணவர்கள் மேற்கொண்டு ஏத்திவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளான்.

தற்போது சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த படுகொலை சம்பவத்தில் வேறு விடயங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.