பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி : தூக்கில் தொங்கிய காதலன் : காரணம் என்ன?

330

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காதலி

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தூக்கில் தொங்கியபடி காதலன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹோட்டல் அறையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. உடனே விரைந்து சென்ற ஊழியர் கதவை தட்டும்போது, மோகித் என்ற 22 வயது இளைஞர் உள்ளிருந்தபடியே, எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால் இதனை நம்பாத ஹோட்டல் ஊழியர் அறையின் பின்புறமாக சென்று ஜன்னல் வெளியே பார்த்துள்ளார்.

அப்போது நேகா என்ற மாணவி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்த ஊழியர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு மோகித் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து நேகாவை மீட்ட பொலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோகித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், மோகித்தின் தந்தை பொலிஸாராக பணியாற்றி வருகிறார். நேகாவும், மோகித்தும் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்