வவுனியா நகரசபையின் எழு நீ விழாவிற்கு தற்காலிக தடையுத்தரவு கோரி உயர்பீடங்களுக்கு மனு!!

714

எழு நீ விழா

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக சந்தேகம் காணப்படுவதால் இவ் விழாவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையேழுத்து பெற்று அக் கடிதத்தினை நேற்றையதினம் (23.11.2018) வவுனியா உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவகத்தில் நேரடியாக கையளித்ததுடன் அதன் பிரதிகள் வடமாகாண ஆளுனர், ச.மோகநாதன் (முதலமைச்சின் அமைச்சு) ஆகியவர்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக் கடித்தத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா நகரசபையின் கலாச்சார குழுவினால் மேற்படி எழுநீ விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இவ்விருது வழங்கும் நிகழ்வின் ஏற்பாடுகளில் பல முறைக்கேடுகள் நடைபெறுவதாக பொதுமக்களாகிய எங்களுக்கு சந்தேகங்கள் காணப்படுகின்றன.

1. எதிர்கலாச்சார குழுவானது எந்த அடிப்படையில் எப்போது நியமிக்கப்பட்டது. கலாச்சார குழுவில் உள்ள அங்கத்தவர்கள் யார் யார்? இவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்.

2. நகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பொது அமைப்புக்களுடன் (விளையாட்டுக் கழகங்கள், கலை இலக்கிய மன்றங்கள்) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்ட விழா ஏற்பாட்டு குழு தெரிவு செய்யப்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அவ்வறிவித்தல் எல்லா பொது அமைப்புகளுக்கும் விடுக்கப்படாமல் தமக்கு வேண்டப்பட்ட சில அமைப்புகளை மட்டுமே அழைத்து கலந்தாலோசித்தாக சொல்லப்படுகின்றது.

பொது அமைப்புகளுடனான கூட்டம் எப்போது நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் எந்தெந்த பொது அமைப்புகள் கலந்து கொண்டன? இக்கலந்துரையாடலுக்கு எவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது?

3.பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பதாக இவ்விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் மூத்த கலைஞர்கள் புறக்கணிப்பட்டுள்ளார்கள். மேலும் விருதுக்கான தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. இதை கேட்டபோது விமசர்சனங்கள் வரும் என்ற காரணத்திற்காக வெளியிடவில்லை எனவும் கேட்டவர்களை விசர்கள் என்றும் அரை வேக்காடுகள் எனவும் பேசுகின்றனர்.

பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பதற்கான இவ்விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளில் விருதுக்கானவர்களை இறுதிப்படுத்தியது யார்?, தெரிவுக்குழுவில் உள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்களின் தகைமைகள் யாவை?, எந்த அடிப்படையில் விருதுக்கானவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்?, அவர்களை பரிந்துரை செய்தவர்கள் யாவர்?, தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை இன்னும் இரகசியமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?, பல மூத்த கலைஞர்களை திட்டமிட்டே புறக்கணிப்பதன் காரணம் என்ன?

4. இவ்விருது விழாவிற்காக பொது மக்களிடமும், வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் நிதி சேகரிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது.

இவ்விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பாதீடு(Budget) என்ன? இவ் விருது வழங்கும் விழாவிற்காக சேகரிக்கபடும் நிதி எந்த கணக்கில் வைப்பிடப்படுகின்றது? யாரால் கையாளப்படுகின்றது? யாரால் சேகரிக்கப்படுகின்றது?, செலவீனங்கள் தொடர்பான கணக்குகள் சரியான முறையில் பேணப்படுகின்றனவா?

இவ்வாறு பல கேள்விகள் வவுனியா வாழ் பொது மக்களாகிய எங்களுக்கு உண்டு. இவற்றை நகரசபையினரிடமோ விழா ஏற்பாட்டு குழுவினரிடமோ கேட்டால் சரியான பதில் இல்லை. அது மட்டுமல்லாமல் நாகரீகமற்ற முறையில் பேசுகிறார்கள். வவுனியா என்பது பல தரப்பட்ட மக்கள் கலந்து வாழுகின்ற பிரதேசம் இவர்கள் பேசுகின்ற பிரதேச வாதம் இனவாதம் போன்றவை எம்மை மிகவும் காணப்படுத்துகின்றன.

எனவே நாங்கள் இது தொடர்பில் நேர்மையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு இது தொடர்பில் காணப்படுகின்ற சந்தேகங்களை தெளிவுபடுத்தி இவ்விருது வழங்கும் விழாவினை நடாத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அதுவரை இவ்விழாவினை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் படியும் விசாரணைகளை மேற்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிரதிகள் :
வடமாகாணம் ஆளுநர் அவர்கள்
திருமதி . ச.மோகநாதன், முதலமைச்சரின் அமைச்சு