வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் கடந்த (22.11.2018) தொடக்கம் (24.11.2018) வரை பூந்தோட்டம் விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன் இறுதி நிகழ்வான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் சிசிர செனவிரத்ன, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுஹானி, பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி லவன், தொற்றாநோய் பிரிவின் வைத்திய கலாநிதி சுதர்சினி, தாதிய பயிற்சி கல்லூரியின் பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.














