இலங்கையில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மரக்கறிகளின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் தற்போது மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன்காரணமாகவே அதன் விலை தற்போது சந்தையில் அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று சந்தை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
உள்ளூர் சந்தையில் லீக்ஸ் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. கரட் 250 ரூபா வரை விற்பனையாகிறது. நுவரெலியாவை பொறுத்தவரை அங்கு இந்த தடைவை 7000 கிலோகிராம் கரட் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் சீரற்ற வானிலையின் பாதிப்பு காரணமாக 2000 கிலோகிராம் கரட்டை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்ததாக அங்குள்ள மரக்கறி விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.





