வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் தினமான இன்று வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுப்பட்டுள்ளன.
அந்த வகையில் மன்னார், பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் டெனீஸ்ரன், சிராய்வா உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்க்ப்படுகின்றது.





















