அம்பாறையில் 25 பாடசாலை மாணவர்கள் கைது!!

859

அம்பாறை உகன பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள தரம் 13 இல் கல்வி பயிலும் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன் உள்ளூர் அரச மருத்துவமனையில் 2 நாட்கள் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காதல் பிரச்சினை இந்த மோதலுக்கு காரணமென பொலிஸார் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்துள்ளது.

தாக்கப்பட்ட மாணவன் தான் காதலிக்கும் மாணவியின் வகுப்பறைக்கு சென்றவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாடசலை அதிபர் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்ததையடுத்து, உகன பொலிஸ் நிலைய உப பொறுப்பதிகாரி பிரேமரத்ன பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை நடத்தினார்.

அதன்பின்னரே 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.