பிரபாகரனை தேசிய வீரர் என்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் : விமல் வீரவங்ச!!

667

Wilmal Weerawansaபிரபாகரனை தேசிய வீரராக பாராளுமன்றத்தில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

239 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 12 புதுக்கடை மற்றும் டயஸ்பெதெஸ தொடர் மாடி வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்விலயே அவர் இதனைக் கூறியுள்ளார்

தற்போது நாட்டில் பொருளாதார பிரச்சினை மட்டுமே உள்ளது எனவும் அதைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் இருப்பதை விட ஜனாதிபதியிடமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.