நீரில் மூழ்கிய கொழும்பின் பிரதான பகுதிகள் : மக்கள் பரிதவிப்பு!!

521

 

மக்கள் பரிதவிப்பு

கொழும்பு நகரில் நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியமையினால் மக்கள் கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த மலை மாலை 5.30 மணிவரை பெய்துள்ளது. கடந்த 3 மணித்தியால காலப்பகுதியில் 122 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தும்முல்ல, நிதஹாஸ் மாவத்தை, ஹைட்பார்க், ஹொர்ட்டன் பிளேஸ், சின்ஸி வீதி, யூனியன் பிளேஸ் மற்றும் பேஸ்லைன் வீதி உட்பட மேலும் சில வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. சில வீதிகள் பல அடி நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணி நிறைவடைந்து வீடு நோக்கி பயணித்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மற்றும் நாளை அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.