வவுனியா பொலிசாரால் பாடசாலை மாணவர்களுக்கு முன்மாதிரியான செயற்பாடு!!

638

வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழக்குத் தொடுநர் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் புஸ்பலாலின் மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் 65 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சீருடை, பாதணிகள் என்பன நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம். எஸ். எம். தென்னக்கோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இப்பாடசாலையில் கல்வி கற்றுவரும் வசதியற்ற 65 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சீருடைகள், பாதணிகள் என்பனவும் வழங்கிவைத்தார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் இறுதியில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டுவரும் 11 ஆசிரியர்களுக்கு சிறப்பு நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் 1இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியில் இப்பொருட்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.