வவுனியாவில் பேருந்தில் இளைஞர் இருவர் கைது!!

460

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்ற இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று (29.11) காலை 6 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – கதிர்காமம் பேருந்தை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 21, 28 வயதுடைய இரு இளைஞர்களை 2கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.