வவுனியா மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வு!!

1165

வவுனியா பிரதேசமட்ட மனித உரிமை வலய செயலணியின் அங்குரார்ப்பண நிகழ்வும் கருத்தமர்வும் இன்று (29.11) காலை 10 மணியளவில் வன்னி இன் விருந்தின விடுதியில் வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய கருத்தமர்வில் மனித உரிமைகள் மீறல்களை வெளிக்கொண்டுவருதல் மற்றும் சட்டரீதியிலான தெளிவூட்டல்களை வழங்குதல் என்பன மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஆர்.எல்.வசந்தராஜ் கலந்துகொண்டு கருத்தமர்வுகளை வழங்கினார்.

காலை முதல் மாலை வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆண்கள் பெண்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.