கால்வாய்க்குள் விழுந்து வாகனம் விபத்து : ஒருவர் பலி!!

260

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ஏற்றபட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த விபத்தில் வேறு எவரேனும் உயிரிழந்துள்ளனரா எனும் அடிப்படையில் குறித்த கால்வாயில் தீவிர தேடுதலில் பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.