மைத்திரியை எச்சரிக்கை செய்த சபாநாயகர் கரு ஜயசூரிய!!

251

அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டரீயாகவும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவும் செயற்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி முதல் தற்போது வரை நாட்டின் சட்டத்திற்கும், நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும், சர்வதேச நாடாளுமன்ற சங்கம் மற்றும் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டே செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் சம்பிக்க ரணவக்க உரையாற்றியிருந்தார்.

அவரது உரையில், சபாநாயகரின் பெயர் அடிப்பட்டதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் செயற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் ஜனாதிபதியை நேரிசல் சந்தித்து அவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டதாகவும், நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மை கருத்திற்கு இடமளிக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-