கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள்!!

235

 

வாகன விபத்து

புத்தளம் – நாத்தாண்டியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று நாத்தாண்டியா – வலஹப்பிட்டிய பகுதியில் நேற்று விபத்திற்குள்ளாகி இருந்தது.

இதில் நால்வர் உயிரிழந்ததுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் எனவும், அவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சொகுசு பஸ் பாதையை விட்டு விலகி, வலஹப்பிட்டிய பகுதியில் நீரோடையில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.