பிரதமர் பதவியை தாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கு பற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தாம் பதவியை துறக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பதவியை இராஜினாமா செய்வீர்களா? என சிலர் வினவி வருவதாகவும் அதற்கு வாய்ப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் வழக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவனம் செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டினையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-





