வவுனியாவில் மின் ஒழுக்கு காரணமாக வர்த்தக நிலையத்தில் தீ : பலகோடி சேதம்!!

1124

 

வர்த்தக நிலையத்தில் தீ

வவுனியாவில் இன்று(01.12) அதிகாலை கண்டி வீதியிலுள்ள கிரி எலக்ரோணிக் சுப்பர் மார்க்கட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வர்த்தக நிலையத்தின் நிலக்கீழ் அறையில் களஞ்சியபப்படுத்தப்பட்ட பெருமளவு மின்சார உபகரணங்கள், சொசுகுக் கதிரைகள், பிளாஸ்டிக் கதிரைகள் என பலகோடி ரூபா பெறுமதியான உபகரணங்கள் எரிந்துபோயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கண்டி வீதியிலுள்ள கிரி எலக்ரோணிக் சுப்பர் மார்க்கட்ரை நேற்று இரவு உரிமையாளர் மூடிவிட்டுச் சென்றுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் வர்த்தக நிலையத்தினை திறக்கச் செனறபோது வர்த்தக நிலையத்தில் வழமைக்கு மாறான நிலைமைகள் காணப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதுடன் வர்த்தக நிலையத்தில் பொருட்கள் எரிந்து காணப்பட்டுள்ளது இது குறித்து பொலிசார் மற்றும் நகரசபை, வர்த்தகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப்படையினர், நகரசபை உறுப்பினர்கள், பொலிசார், வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வர்த்தக நிலையத்திற்குள் சென்று பார்வையிட்டபோது நிலக்கீழ் அறையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு எரிவு எற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மூன்று மாடிகளைக்கொண்ட குறித்த வர்த்தக நிலையத்தில் நிலக்கீழ் அறையிலேயே மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதுடன் மின் இணைப்புக்கள் அனைத்தும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சொகுசு கதிரைகள், பிளாஸ்டிக்கதிரைகள், சொகுசு மெத்தைகள், மின்சார உபகரணங்கள், தொலைக்காட்டிப் பெட்டிகள் எனப் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்கள் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.