தமிழ் தேசிய இளைஞர் கழகம் மக்கள் நலம் சார்ந்த செயற்றிட்டங்களை தாயக பகுதியில் செயற்படுத்திவரும் இவ் வேளையில் தாண்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் திருநாவற்குளம் கிராமத்தில் தமது ஆரம்ப நிகழ்வினை அண்மையில் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் இவ் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் தற்போதைய உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபக தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் , வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலந்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்கள்.
சிறப்பு அதிதியாக தாண்டிக்குளம் கிராம சேவையாளர் யோகநாதன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதிகளாக திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை, பண்டாரவன்னியன் சனசமூக நிலைய தலைவர் கணேசமூர்த்தி ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










