தந்தை இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரைவிட்ட மகள் : நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!!

523

நாமக்கல் அருகே தந்தை இறந்த செய்தி கேட்டு, அவரது உடல் மீது சாய்ந்தவரே மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவருடைய மகள் அம்பாயி கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாக, தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு தந்தையுடனே இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துளசிராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருடைய உடலை வீட்டிற்கு கொண்டு வரும்போது, அதனை பார்த்த அதிர்ச்சியில் தந்தையின் உடல் மீது மயங்கி விழுந்தவாறே அம்பாயியும் உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.