ஆபாச டூப் நடிகை சர்ச்சை : நஸ்ரியா மீண்டும் பாய்ச்சல்!!

641

Nasriyaநய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அப்படத்தின் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா குற்றம்சாட்டினார்.

போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குனர் சற்குணம் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக நஸ்ரியா தற்போது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

நய்யாண்டி படத்தில் நடிக்க என்னை அணுகிய போதே கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று டைரக்டரிடம் கூறிவிட்டேன். அவரும் சம்மதித்தார். அதன் பிறகே நடிக்க ஒப்புக் கொண்டேன். நய்யாண்டி படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் கவர்ச்சி காட்சி இருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். இயக்குனர் சற்குணத்திடம் இது பற்றி கேட்டேன். டூப் நடிகையை வைத்து அந்த ஆபாச காட்சியை எடுத்ததாகச் சொன்னார்.

சினிமாவில் பணம் முக்கியமாக இருக்கலாம். அதுபோல் நம்பிக்கையும் இருக்க வேண்டும். நய்யாண்டி படத்தில் எனக்கு நம்பிக்கை மோசடி நடந்தது. அந்த படம் சரியாக ஓடவில்லை என்கிறார்கள். இதுமாதிரி மோசடி செய்யாமல் எடுத்து இருந்தால் படம் நன்றாக இருந்து இருக்கும். எனக்கும் ஜெய்க்கும் காதல் என வதந்திகள் பரவி உள்ளன. அவரை நான் காதலிக்கவில்லை. நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று நஸ்ரியா கூறினார்.