வவுனியா ஹொறவபொத்தான வீதியின் இலுப்பையடி பகுதியில் நிறுத்துவைக்கபட்டிருந்த தனது முச்சக்கரவண்டி காணாமல்போயுள்ளதாக அதன் உரிமையாளரால் வவுனியா பொலிஸ்நிலயத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் (02.12)காலை முச்சக்கரவண்டியில் திருகோணமலை சென்ற உரிமையாளர் இரவு 11 மணியளவில் வவுனியாவிற்கு மீண்டும் வந்ததுடன் இலுப்பையடிபகுதியில் உள்ள அவரது வர்த்தக நிலையைத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு வர்த்தக நிலையத்தில் உறங்கியுள்ளார்.
காலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது முச்சக்கரவண்டி மாயமாகியுள்ளது. அதன் அனுமதிபத்திரங்கள், திறப்பு போன்றன உரிமையாளரிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொலிசாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
NP AAQ 4528 இலக்கமுடைய முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.





