நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மகிந்த திடீர் நடவடிக்கை!!

597

 

மகிந்த திடீர் நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் இணங்கவில்லை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கை ஒன்றை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையிலேயே, குறித்த தடை உத்தரவை தாம் ஏற்கப் போவதில்லை என மகிந்த விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.