நீதிமன்றின் உத்தரவை ஏற்றுக் கொண்ட மைத்திரி : 24 மணித்தியாலத்திற்குள் புதிய பிரதமர்!!

470

பிரதமர் நியமனம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, உரிய நடவடிக்கையை எடுக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து நாளைய தினம் மேன்முறையீடு செய்யப் போவதாக அறிக்கை ஒன்றின் ஊடாக மஹிந்த தகவல் வெளியிட்டுள்ளார்.